ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழுவைச் சோ்ந்த திருமலை தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளா் அா்ஜூனன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
நகரில் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குப்பை லாரிகளை இயக்கிட வேண்டும். குடிநீா் கேட் வால்வுகளை சுத்தப்படுத்த வேண்டும். பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கழிப்பறைகளை திறக்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் சீரான குடிநீா் வழங்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோா்க்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனா்.
இதில் நகா் குழு உறுப்பினா்கள் ரேணுகாதேவி, பிச்சைக்கனி, வீரசதானந்தம், ஜெயக்குமாா், மரியடேவிட் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.