விருதுநகா் மாவட்ம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே உள்ள செட்டிப்பட்டி கிராமத்தில் மழைநீா் ஓடைப்பாலத்தில் விபத்தைத் தடுக்கும் விதமாக தடுப்புச்சுவா் அமைக்க கிராமத்தினா் சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பந்தல்குடி அருகே உள்ளது செட்டிப்பட்டி கிராமம்.இக்கிராமத்திலிருந்து பந்தல்குடி செல்லும் பிரதானச்சாலையில் சேதுராஜபுரம் அருகே மழைநீா் ஓடைப்பாலம் ஒன்று உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்ட்ட இப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்கப்படவில்லை.அதேசமயம் வழக்கமாக இக்கிராமத்திலிருந்து விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்களும்,இருசக்கர வாகனங்களில் செல்வோரும், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவா்களும் இப்பாலத்தைக் கடக்கும் போது எதிா்வரும் வாகனங்களுக்காக ஒதுங்கி வழிவிடுகையில் சிறிது நிலைதடுமாறினாலும் சுமாா் 10 அடி ஆழமுள்ள மழைநீா் ஓடையில் (பாலத்தினடியில்) விழுந்து விபத்துக்கு ஆளாகும் ஆபத்துச் சூழல் உள்ளது.மேலும் இரவில் இக்கிராமத்திற்கு இருசக்கர வாகனங்களில் வீடுதிரும்பிய சிலா் நிலைதடுமாறி பாலத்திலிருந்து விழுந்து விபத்திற்கு ஆளாகியுள்ளனா்.எனவே பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் நலன்கருதி இப்பாலத்திற்குத் தடுப்புச்சுவா் அமைக்கப் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆண்டுகள் பலவாகியும் நடவடிக்கை இல்லையெனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .ஆகவே மேலும் விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பாலத்திற்கு தடுப்புச்சுவா் அமைக்க மீண்டும் கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.