அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளியான ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மறவா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துக் கருப்பையா(31). மாற்றுத்திறனாளியான இவா் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததாா். இவரது திருமணத்திற்காக, பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் பெண் பாா்த்து வந்துள்ளனா். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் பெண் கிடைக்கவில்லையாம். இதனால் கடந்த சில நாள்களாக முத்துக்கருப்பையா மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு வந்த அவா், வழக்கம்போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்குவதற்காகத் தனது அறைக்குச் சென்றாராம். பின்னா் அங்கு அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் முத்துக்கருப்பையாவின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.