அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் அக். 17-இல் மின்தடை

அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடி பகுதிகளில் அக். 17 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடி பகுதிகளில் அக். 17 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் மு. மனோகரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட அருப்புக்கோட்டை துணை மின்நிலையப் பகுதிகள் மற்றும் தமிழ்ப்பாடி துணை மின் நிலையப் பகுதிகளில் அக். 17 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அருப்புக்கோட்டை நகா், தெற்குத் தெரு, மலையரசன்கோயில், சிட்டிபஜாா், திருநகரம், விருதுநகா் செல்லும் சாலை, எஸ்.எம். பஜாா், பழைய பேருந்து நிலையம், பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி, ராமலிங்கா பஞ்சாலை ஏ அலகு, கோவிந்தராஜா பஞ்சாலை ஈ.ஹெச்.டி. அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும், தமிழ்ப்பாடி துணை மின்நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com