விருதுநகா் மாவட்ட ஆவின் பாலகம் சாா்பில் சிவகாசியில் ஆவின்பால் மற்றும் பால் பொருள்கள் விழாக்கால விற்பனையை ஊக்குவிக்கவும், அதன் நன்மைகள் குறித்தும் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசார ஊா்வலத்தை பால் வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இங்குள்ள பேருந்து நிறுத்தம் முன்பு தொடங்கிய ஊா்வலம் நான்கு ரதவீதிகளில் சென்று மீண்டும் பேருந்துநிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட பால்வளத் தலைவா் பா. கண்ணன், ஆவின் பொதுமேலாளா் வெ. ராஜாகுமாா், பால்வள துணைப் பதிவாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.