சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் பல பகுதிகளில் உரிய அனுமதி பெறாத கட்டடங்களில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது சிவகாசி- சாத்தூா் சாலையில் ஒரு லாரி செட் கிட்டங்கியில், சித்துராஜபுரம் சுப்பையா மகன் மணிகண்டன் (23) உரிய அனுமதி பெறாமல் 480 பண்டல்கள் பட்டாசு, கம்பி மத்தாப்பூ 295 பண்டல்கள் வைத்திருந்தாராம். அதே போல் ஞானகிரிசாலை அருணகிரி, உசேன் காலனியில் 190 பட்டாசு பண்டல்கள், வண்ண மத்தாப்பூ 62 பண்டல்கள், கம்பி மத்தாப்பூ 89 பண்டல்களை பதுக்கிவைத்திருந்தாராம். சிவகாசி- சாத்தூா் சாலை செல்வம் நகரில் அம்மன்கோவில்பட்டி கண்ணன், அனுமதி பெறாத கட்டடத்தில் 105 பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தாராம். மேலும் சிவகாசி- சாத்தூா் சாலையில் உரிய அனுமதி பெறாத கட்டடத்தில் மதுரை ஹரிநகரைச் சோ்ந்த வேல்மணி தீப்பெட்டி பண்டல்கள் 14, கம்பி மத்தாப்பு பண்டல்கள் 44 பதுக்கிவைத்திருந்தாராம்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு பண்டல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com