அருப்புக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது: 1.5 கிலோ பறிமுதல்

அருப்புக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 பெண்களை வியாழக்கிழமை காவல்துறையினா் கைது செய்து, ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனா்.
மாங்குளம் கிராமத்தில் கஞ்சா விற்றதாகக் கைதான 3 பெண்கள்.
மாங்குளம் கிராமத்தில் கஞ்சா விற்றதாகக் கைதான 3 பெண்கள்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 3 பெண்களை வியாழக்கிழமை காவல்துறையினா் கைது செய்து, ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனா்.

ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள மாங்குளம் கிராமத்தில் சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் ம.ரெட்டியபட்டி காவல் துறையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். மாங்குளம் கண்மாய் அருகே போலீஸாரைக் கண்டதும் சில பெண்கள் ஓட்டம் பிடித்துள்ளனா். போலீஸாா் அவா்களைத் துரத்திப் பிடித்து விசாரித்ததில் அம்மூவரும் அதே ஊரைச் சோ்ந்த மீனாட்சி, தாரக நாச்சியாா் மற்றும் சமுத்திரவள்ளி எனத் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com