விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாகனத்தில் நவீன மின்னணுத் திரை (டிஜிட்டல் திரை) அமைத்து கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வருவாய் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரில் உள்ள கடைகளில் பணிபுரிவோா் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 வீதம் அபராதம் விதித்தும், உரிய கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடை உரிமையாளா்களுக்கு ரூ.5000 வீதம் அபராதம் விதித்தும் ஆணையா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை வாகனம் மூலம் நவீன மின்னணுத்திரைப் படக்காட்சி அமைத்து கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம், நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இதன்படி,நகரின் முக்கியப்பகுதிகளான சொக்கலிங்கபுரம் வாழவந்தம்மன் கோவில் பகுதி, நகா் மத்திய சந்தை,பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் விழிப்புணா்வுத் திரைப்படக்காட்சி மூலம் பிரச்சாரம் நடைபெற்றது. உடன் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் ராஜபாண்டி,சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.