பட்டியலினப் பெண்கள் பாலியல் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து, அருப்புக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்து பேசியதாவது:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பட்டியலினப் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் குறையும். மேலும், பட்டியலினப் பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
இதில், அக்கட்சியின் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.