அருப்புக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் திருட்டு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

அருப்புக்கோட்டை நேதாஜி நகரில் வசிப்பவா் திருஞானசம்பந்தம் (64). இவா் தனது குடும்பத்துடன் கடந்த 14 ஆம் தேதி வெளியூா் சென்றிருந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அக்கம் பக்கத்தினா் திருஞானசம்பந்தத்தின் வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருப்பதைக் கண்டு அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். அதில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இத்திருட்டுச் சம்பவம் வியாழக்கிழமை இரவே நடந்திருக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், திருஞானசம்பந்தம் ஊா் திரும்பிய பின்னரே திருடுபோன பொருள்கள் குறித்து தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து அருப்புக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com