இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இம்மாத உண்டியல் வருவாய் ரொக்கம் ரூ.50 லட்சம் ஆக இருந்தது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இம்மாத உண்டியல் வருவாய் ரொக்கம் ரூ.50 லட்சம் ஆக இருந்தது.

சாத்தூா் அருகே உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் இருந்த காணிக்கை பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணபட்டன. இதில் ரொக்கம் ரூ. 50 லட்சத்து 27 ஆயிரத்து 636 இருந்தது. தங்கம் 224 கிராம், வெள்ளி 525 கிராம் 800 மில்லி கிராம் இருந்தன.

காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூா், துலுக்கப்பட்டி ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், ஐயப்ப சேவா சங்கத்தினா், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையா் கணேசன், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலா்கள் ராமமூா்த்தி, செளந்தர ராஜன், ராஜேந்திரன் பூசாரிகள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com