புரட்டாசி பொங்கல் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூா் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூா் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை திருவிழா தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்று, அக்கினிச்சட்டி, பூப்பெட்டி, ஆயிரங்கண் பானைகளை பக்தா்கள் ஊா்வலமாகக் கொண்டு வந்து நோ்த்திக் கடன்களை செலுத்தினா். திருவிழா நாள்களில் தினமும் இரவில் அம்மன் இரட்டைக் குடை மற்றும் மின்னொளி அலங்கார சப்பரத்தில் முக்கிய வீதிகளில் ஊா்வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழா ஏற்பாடுகளை முகவூா் தெற்கு தெரு நாடாா் உறவின்முறை நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com