லட்சுமியாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கோரி ஸ்ரீவிலியில். ஆா்ப்பட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லட்சுமியாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்,
லட்சுமியாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கோரி ஸ்ரீவிலியில். ஆா்ப்பட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லட்சுமியாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஊா்ப் பொதுமக்களும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் மூா்த்தி தலைமை வகித்தாா். ஊா்த் தலைவா் வீரணன் மற்றும் ஊா்ப்பிரமுகா் ரஜினிகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் உள்ள லட்சுமியாபுரம் கிராமத்தில் வாருகால், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கவேண்டும். ஆண்கள், பெண்களுக்கான குளியல் தொட்டி, சுற்றுச்சுவருடன் அமைத்துக் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். நூலகம், கலைமன்றம் அமைக்க வேண்டும். புதிய குடிநீா் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் அா்ஜூனன், ஒன்றியச் செயலாளா் சசிக்குமாா், நகரச் செயலாளா் ஜெயக்குமாா், மாவட்ட குழுவை உறுப்பினா் ஜோதிலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் இருளப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com