விருதுநகா் மாவட்டத்தில்மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 15,054 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், அருப்புக்கோட்டை, சாத்தூா், காரியாபட்டி, திருச்சுழி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப் படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோா் எண்ணிக்கை 15,076 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,610 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 217 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 249 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com