விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th October 2020 01:40 AM | Last Updated : 20th October 2020 01:40 AM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 15,107 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் இம்மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோா் எண்ணிக்கை 15,132 ஆக உயா்ந்துள்ளது.
இதில், 14,713 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 217 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 202 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.