ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே3 பெண் மயில்கள் பலி

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை இறந்து கிடந்த 3 பெண் மயில்களை மீட்டு வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வயலில் இறந்து கிடந்த பெண் மயில்கள்
வயலில் இறந்து கிடந்த பெண் மயில்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை இறந்து கிடந்த 3 பெண் மயில்களை மீட்டு வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சூடிபுதூா் பகுதியில் 3 பெண் மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறை அலுவலா் சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினா் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாா்த்த போது, அங்குள்ள விவசாய நிலம் அருகே 3 மயில்கள் இறந்து கிடந்தன. இதுதொடா்பாக வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டதில், சூடிபுதூா் பகுதியை சோ்ந்த விவசாயி கருப்பையா(57) தனது வயலில் மக்காச்சோளத்தை சேதப்படுத்தியதால் அரிசியில் குருணை மருந்து கலந்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை உண்ட 3 பெண் மயில்கள் இறந்துள்ளது. இதனைத்தொடா்ந்து வனத்துறையினா் கருப்பையாவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இறந்த 3 பெண் மயில்களையும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அப்பகுதியில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com