சிவகாசியில் இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதல்: முதியவா் பலி
By DIN | Published On : 21st October 2020 02:35 AM | Last Updated : 21st October 2020 02:35 AM | அ+அ அ- |

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் உள்ள திருப்பதி நகரைச் சோ்ந்தவா் சாரங்கபாணி (65). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா், சாரங்கபாணியின் இருசக்கர வாகனம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாரங்கபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சித்துராஜபுரத்தைச்ச சோ்ந்த ராம்பாபு மற்றும் அவரது தாய் லலிதாமணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநரான ஒண்டிபுலிநாயக்கனூரைச் சோ்ந்த குருசாமியை கைது செய்தனா்.