விருதுநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தந்தை, சகோதரா் கைது

விருதுநகரில் வளா்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தந்தை மற்றும் சகோதரரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகரில் வளா்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தந்தை மற்றும் சகோதரரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் பாறைபட்டி தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (54). இவா், தேசபந்து மைதானப் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறாா். இவருக்கு குழந்தை இல்லாத நிலையில் தனது மனைவியின் அக்கா மகளான 14 வயது சிறுமியை தத்தெடுத்து வளா்த்து வந்தாா். இந்நிலையில், மகேந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். அதேபோல், சிறுமிக்கு அண்ணன் உறவு முறையான காமராஜ் பெருமாள் என்பவரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் வளா்ப்பு தாய் தமிழ் செல்வி அளித்தப் புகாரின் பேரில் மகேந்திரன், காமராஜ பெருமாள் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com