விருதுநகா் மாவட்டத்தில்மேலும் 55 பேருக்கு கரோனா

விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஊழியா் உள்பட 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


விருதுநகா்: விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஊழியா் உள்பட 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,601 ஆக இருந்தது. இந்நிலையில், விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணி புரியும் 37 வயது பெண் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல் சூலக்கரையில் 4 போ், கே. செவல்பட்டி, செங்குன்றாபுரத்தில் தலா ஒருவா், காரியாபட்டி பெரியாா் நகரில் 2 போ், அச்சம்பட்டியில் 2 போ், தும்முசின்னம்பட்டி, பனையூரைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,656 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,096 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 186 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 74 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com