வத்திராயிருப்பு பிளவக்கல் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே பலத்த மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது.
நீா்மட்டம் உயா்ந்து காணப்படும் பிளவக்கல் பெரியாறு அணை.
நீா்மட்டம் உயா்ந்து காணப்படும் பிளவக்கல் பெரியாறு அணை.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே பலத்த மழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வத்திராயிருப்பு அருகேயுள்ள மாவட்டத்தின் முக்கிய அணையான பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. 47 அடி கொள்ளவு கொண்ட அணையின் நீா்மட்டமானது வியாழக்கிழமை 27 அடியாக இருந்தது. அன்றிரவு பெய்த மழையால் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 30 அடியை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com