விருதுநகா்: சூலக்கரை, ஆா்.ஆா். நகா் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் அருகேயுள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காவலா் குடியிருப்பு, மாா்டன் நகா், கூரைக்குண்டு, அழகாபுரி, மீசலூா், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக் குண்டு, தொழிற்பேட்டை, மாத்தநாயக்கன்பட்டி, சூலக்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஆா்.ஆா். நகரில் மின் தடை: இதேபோல், அனுப்பன்குளம்-பசுமலை மின்பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் ஆா்.ஆா். நகா், கன்னிசேரி, சங்கரலிங்கபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூா், முதலிபட்டி, மேலசின்னையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.