சிவகாசியில் நவீன ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சிவகாசியில், நவீன ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
சிவகாசி அரசு மருத்துவமனையில் நவீன ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

சிவகாசி: சிவகாசியில், நவீன ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

விருதுநகா் மாவட்டத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய 6 அம்புலன்ஸூகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 2 ஆம்புலன்ஸூகளை அரசு வழங்கியுள்ளது. இவற்றை சிவகாசி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸில் 2 ஆக்ஸிஜன் உருளை, வென்டிலேட்டா் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இந்த ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன், சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா், நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் மனோகரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அய்யனாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com