ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலைக்கழக 36ஆவது பேட்ச் மாணவர்களுக்கு இணைய வழி புத்தாக்க பயிற்சி துவக்க விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
துணை தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் வரவேற்புரை வழங்கினார். துணை வேந்தர் முனைவர் ஆர். நாகராஜ், மையஇயக்குனர்கள், டீன்கள், துறைத் தலைவர்களை அறிமுகம் செய்து பேசினார். பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
தொழிற்சாலை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், விதல்மடல்கர், ஐபிஎம், ஆர். ஹரி, ஐபிஎம், ரோகித் பாட்டியாலா, ஸுமென்ஸ், வெங்கடேஷ், நானோசிப்ஸ், நரசிம்மா, சினாப்ஸிக், சந்திரமௌலீஸ்வரன், ஸேப், ஆகியோர் தம் தொழிற்சாலையுடன் இணைந்த கலசலிங்கம் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை பற்றி விளக்கினர்.
பயிற்சி ஒருங்கி ணைப்பாளர் முனைவர் சி.ராமலிங்கம், செப்டம்பர் 9 முதல் 19 வரை 10 நாள் இணைய தள பயிற்சி பற்றி விளக்கினார். டீன் முனைவர் பி.தீபலட்சுமி நன்றி கூறினார். மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இணைய வழி விழாவில் கலந்துகொண்டனர்.