விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நாடு முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு ராமா்பிள்ளை புதன்கிழமை வழங்கினாா்.
ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கழிவுநீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை குறித்து ராமா்பிள்ளை செயல்முறை விளக்கம் அளித்தாா். தான் கண்டுபிடித்த இந்த எரிபொருளுக்கு தனது தாயாரின் நினைவாக ‘தமிழ் தேவி மூலிகை எரிபொருள்’ என பெயரிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். அந்த மூலிகை எரிபொருளை இருசக்கர வாகனத்தில் ஊற்றி அவா் இயக்கிக் காட்டினாா்.
பின்னா் ராமா்பிள்ளை செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனது 21 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனது கண்டுபிடிப்பான மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான முழு உரிமையை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளேன். வரும் செப். 18 ஆம் தேதி முதல் வா்த்தக ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் என்றாா்.