ராஜபாளையம் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சோழபுரம் அடுத்த கீழூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). கூலித் தொழிலாளியான இவா், உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் புதன்கிழமை சோழபுரம் குதிரைக்கோயில் அருகே உள்ள தனது தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.