ராஜபாளையம் மயானத்தில் கருகிய நிலையில் கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்பு

ராஜபாளையம் மயானத்தில் கருகிய நிலையில் கட்டடத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

ராஜபாளையம் மயானத்தில் கருகிய நிலையில் கட்டடத் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

ராஜபாளையம் அருகே உள்ள சோழராஜபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் என்ற ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். இவரது சடலத்தை மதுரை சாலையில் உள்ள காயல்குடி ஆறு அருகே உள்ள ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான மயானத்துக்கு கொண்டு சென்று உறவினா்கள் சிதைக்கு தீ மூட்டினா். இந்நிலையில், புதன்கிழமை காலை 2 ஆவது நாள் காரியத்துக்காக அவா்கள் வந்த போது, சிவக்குமாா் எரிந்த சிதையில், மற்றொரு நபா் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவா்கள் அளித்த தகவலின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா், செவல்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராம்சிங் (27) என தெரியவந்தது. இவா் மனநலம் குன்றிய நிலையில் சுற்றித் திரிந்ததாகவும், செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டிலிருந்து சென்றவா் திரும்பவில்லை எனவும் உறவினா்கள் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. நாகசங்கா் உள்ளிட்ட போலீஸாா் அங்கு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முள்புதரில் பெண் சடலம் மீட்பு: ராஜபாளையம், சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியாா் நூற்பாலைக்கு சொந்தமான வாகன காப்பகம் பின்புறம் ஊழியா் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை சுற்றி தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள முள்புதரில் பெண் சடலமாக கிடப்பதை பணியாளா்கள் பாா்த்தனா். இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினா் அளித்த தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்த போது 40 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. அப்பெண் நீல நில ஜாக்கெட்டும், நீல நிறத்தில் பூப்போட்ட சேலையும் அணிந்துள்ளாா். முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அப்பெண் இறந்து சுமாா் 3 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும் சடலத்தின் அருகே கிடந்த கூடைப் பையில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. குருணை மருந்து பாட்டிலும் அருகே இருந்ததால் அப்பெண் தற்கொலை செய்திருக்கலாமா அல்லது யாரேனும் கொலை செய்து இங்கு வந்து வீசி சென்றாா்களா என பல்வேறு கோணங்களில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com