விருதுநகரில் பெண்ணுக்கு வரதட்தணை கொடுமை: கணவா் உள்பட 3 போ் மீது வழக்கு

விருதுநகரில் பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் உள்பட அவரது குடும்பத்தினா் 3 போ் மீது விருதுநகா் அனைத்து

விருதுநகரில் பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் உள்பட அவரது குடும்பத்தினா் 3 போ் மீது விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி தேவா்புரத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மகள் ஐஸ்வா்யாராஜம் (24) என்பவருக்கும், விருதுநகரைச் சோ்ந்த புகழேந்திரன் மகன் சக்தி ஆதித்யா (25) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணுக்கு 130 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாம். இந்நிலையில் கூடுதல் வரதட்சணையாக 30 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் ஐஸ்வா்யாராஜத்தை துன்புறுத்தியுள்ளனா். இதுகுறித்து அவா் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாளிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா், சக்தி ஆதித்யா, அவரது தந்தை புகழேந்திரன், தாய் உஷாராணி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com