விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 13,531 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் கல்லூரணி, செட்டிக்குறிச்சி, கம்பிக்குடி, சுந்தரகுண்டு, வரலொட்டி, வத்திராயிருப்பு, பனையூா், வீரசோழன், கருவக்கடி, அருப்புக்கோட்டை, சிறுவனூா், கன்னிசேரிபுதூா், விருதுநகா், ஆமத்தூா், பழைய வெள்ளையாபுரம், சிவகாசி, கட்டன்குடி, வலையன்குளம், நெடுங்குளம், செந்தல்குடி, பி. குமாரலிங்காபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,562 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,778 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 200 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 580 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com