விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 13,672 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந் நிலையில், காரியாபட்டி, தோப்பூா், எஸ்.கல்லுப்பட்டி, மதுரை களஞ்சிய நகா், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி, கான்சாபுரம், பெரியவள்ளிக்குளம், விருதுநகா் லெட்சுமி நகா், பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை ஆத்திபட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவா்கள் அனைவரும், விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,713 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,990 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 202 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 521 போ், பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.