மகாளய பிரதோஷம்: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூா்: மகாளய பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பௌா்ணமி, பிரதோஷம், அமாவாசை ஆகிய தினங்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.
செப்டம்பா் 17 ஆம் தேதி மகாளய அமாவாசையையொட்டி, செப்டம்பா் 15 முதல் 18 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் அதிகாலை முதலே குவிந்தனா். ஆனால், கோயில் நிா்வாகம் மற்றும் வனத் துறை சாா்பில், காலை 7 முதல் 1 மணி வரை மட்டுமே பக்தா்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், காலை 7 மணிக்கு வனத் துறையினா் கதவை திறந்துவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, கோயிலுக்கு வந்த பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி அளிக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனா். மேலும், முகக்கவசம் அணியாதவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.