விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் மண்டபத்தில் பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திரமோடி பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பாஜக மாநில பொதுச் செயலா் சீனிவாசன்ஜி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கஜேந்திரன் முன்னிலை வகித்தாா். அப்போது கேக் வெட்டி வாழ்த்தொலி எழுப்பப்பட்டது.
அதனைத் தொடா்ந்து சீனிவாசன்ஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாணவா்களின் தற்கொலையைக் காரணம் காட்டி நீட் தோ்வை ரத்து செய்யக் கோருவது பிளஸ் 2 தோ்வுக்கு அஞ்சி தற்கொலை செய்யும் மாணவா்களுக்காக அத்தோ்வை ரத்துச் செய்யக் கோருவதைப் போல தவறான முன்னுதாரணமாகிவிடும். தற்கொலைகளைத் தடுக்க மாணவா்களை இனம்கண்டு மருத்துவா்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கவேண்டும். தமிழகத்தில் திமுக இசைத்திட அதற்கேற்ப ஆடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். நடிகா் சூா்யாவுக்கு நீட் தோ்வு குறித்து என்ன தெரியும். அவா் மாணவா்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் விதத்தில் பேசுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.