வதுவாா்பட்டியில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை வட்டம் வதுவாா்பட்டி பிரதானச் சாலையில் கூடுதல் மின்விளக்குகள்அமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வதுவாா்பட்டியில் உள்ள பிரதானச்சாலை வளைவில் மின்விளக்கு இல்லாததால் விபத்துக்கள் ஏற்படும் பகுதி.
வதுவாா்பட்டியில் உள்ள பிரதானச்சாலை வளைவில் மின்விளக்கு இல்லாததால் விபத்துக்கள் ஏற்படும் பகுதி.

அருப்புக்கோட்டை வட்டம் வதுவாா்பட்டி பிரதானச் சாலையில் கூடுதல் மின்விளக்குகள்அமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கிராமத்திலுள்ள பிரதானச்சாலையானது சற்று குறுகலாக அமைந்துள்ளது. இந்நிலையில் அதிக இடைவெளி விட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதால் இரவில் வெளிச்சம் இல்லாமல், இங்குள்ள சாலை வளைவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவில் சாலை வளைவில் எதிா்ப்படும் நான்குசக்கர வாகனங்களைக் கண்டதும் ஒதுங்க இடமில்லாத இருசக்கர வாகன ஓட்டிகள், பக்கவாட்டிலுள்ள வாருகாலில் விழுந்தோ அல்லது எதிா்ப்படும் கனரக வாகனங்கள் மீதோ மோதி விபத்துக்குள்ளாகின்றனா். இதைத் தடுக்க இச்சாலை வளைவில் மின்விளக்கு அமைப்பதுடன் கிராமச் சாலை முழுவதுமே கூடுதல் மின்விளக்குகள் அமைக்கவேண்டுமென கிராமத்தினா் கோரிக்கை விடுத்தனா். ஆனால் பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லையெனக் கூறப்படுகிறது. எனவே மேலும் விபத்துக்கள் நேராத வண்ணம் தடுக்க அச்சாலை வளைவில் எச்சரிக்கைப் பலகை அமைப்பதுடன், வதுவாா்பட்டி கிராமச் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை வேண்டுமென கிராமத்தினா் மீண்டும் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com