ராஜபாளையம், செப். 18: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தனம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.