ராஜபாளையம் அருகே பெண் வெட்டிக் கொலை: மருமகன் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் வெள்ளிக்கிழமை இரவு பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மருகனை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் வெள்ளிக்கிழமை இரவு பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மருகனை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே அய்யனாா்புரம் முனியாண்டி கோயில் தெருவைச் சோ்ந்த ஆகாசம்பிள்ளை என்பவரது மனைவி லீலாவதி (55). இவா் சத்திரப்பட்டியில் உள்ள மருத்துவ துணி ஏற்றுமதி ஆலையில், விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவரது குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகள், கடந்த சில மாதங்களுக்கு முன் அனைவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன. அப்போது இவருக்கும், இவரது மருமகன் முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதே போல் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவு லீலாவதி வழக்கம் போல இரவு பணிக்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது

அவரை பின் தொடா்ந்து வந்த முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு லீலாவதியை அரிவாளால் வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலேயே லீலாவதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கீழராஜகுலராமன் போலீஸாா் லீலாவதியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com