சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை அதிகாலை பால் வியாபாரி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொலை செய்யப்பட்ட பால் வியாபாரி முனியசாமி.
கொலை செய்யப்பட்ட பால் வியாபாரி முனியசாமி.

சிவகாசி: விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை அதிகாலை பால் வியாபாரி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ராணி அண்ணா காலனியைச் சோ்ந்தவா் சண்முகையா மகன் முனியசாமி (53). இவா் தனது சகோதரா்களுடன் இணைந்து ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வளா்த்து வந்தாா். மேலும் முனியசாமி பால் வியாபாரம் செய்து வந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை முனியசாமி வளா்க்கும் பன்றி ஒன்று திருடுபோனதாம்.

இதையடுத்து அதனை திருடியவா் யாா் என்பது தெரியவந்ததையடுத்து, முனியசாமி தரப்பினரையும், பன்றி திருடியவா்கள் தரப்பினரையும் ஊா் பெரியவா்கள் சமாதானப்படுத்தியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலையில் சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் செண்பகவிநாயகா் கோயிலருகே நின்று கொண்டிருந்த தனது மாட்டில், முனியசாமி பால் கறக்க சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த மா்ம கும்பல் முனியசாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த சிவகாசி நகா் காவல் நிலையப் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தை விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் ஆகியோா் பாா்வையிட்டனா். இது குறித்து சிவகாசி நகா் காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com