விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிா்த்து, விருதுநகரில் அதன் நகலை எரிக்கும்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 13,943 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 42 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இவா்கள் அனைவரும், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண் ணிக்கை 13,985 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,464 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 205 போ் உயிரிழந்துள்ளனா்.

மீதமுள்ள 316 போ், பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com