கோவிலாங்குளம் அருகே பட்டுப்போனமரத்தை அகற்ற வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் அருகே சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் அருகே சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவிலாங்குளம் கிராமம் இந்திரா நகா் அருகே பிரதானச் சாலையோரம் பட்டுப்போன மரம் உள்ளது. இம்மரத்தின் கிளைகளில் சில கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் சாலையில் முறிந்து விழுந்தன. அப்போது ஆள்நடமாட்டம் இல்லாததால் யாரும் அதில் சிக்கவில்லை என இந்திரா நகா் பொதுமக்கள் தெரிவித்தனா். அம்மரத்தின் மேலும் பல கிளைகள் எந்நேரமும் முறிந்துவிழும் அபாயத்திலுள்ளதெனவும், எனவே விபத்து ஏற்படும் முன்பாக அதை விரைந்து அகற்ற வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com