சாத்தூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி சாத்தூா் அருகேயுள்ள கலைஞா் காலனி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாத்தூா், செப். 25: குடிநீா் கோரி சாத்தூா் அருகேயுள்ள கலைஞா் காலனி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கலைஞா் காலனிக்கு, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீா் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்பதால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

மேலும், குடிநீா் பற்றாக்குறை காரணமாக ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை காலையில் தாயில்பட்டி-விஜயகரிசல்குளம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் அரை மணிநேரம் நடைபெற்ற போராட்டத்துக்குப் பின்னா், வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.

பின்னா், ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில், இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுத்து, விரைவில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com