போலீஸாருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

கன்னிசேரிபுதூா் சாலையில் சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்ற கருந்திரிகளை பறிமுதல் செய்ய முயன்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கன்னிசேரிபுதூா் சாலையில் சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்ற கருந்திரிகளை பறிமுதல் செய்ய முயன்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வச்சகாரப்பட்டி காவல் நிலைய காவலா் முத்துமுனியாண்டி தலைமையில் போலீஸாா் கன்னிசேரிபுதூா் சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, சட்ட விரோதமாக கருந்திரிகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வர போலீஸாா் முயன்றனா். அதற்கு அவா்கள் வர மறுத்ததுடன், வாகனத்தை ஏற்றிக் கொலை செய்து விடுவதாக மிரட்டினராம்.

இதுகுறித்து காவலா் முத்துமுனியாண்டி அளித்த புகாரின் பேரில் காமராஜபுரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் பரமசிவம் (46), முதலிப்பட்டியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ரமேஷ் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 3000 குரோஸ் கருந்திரி மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com