சிவகாசியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

சிவகாசியில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகாசி: சிவகாசியில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகாசி மருதுபாண்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா், அங்குள்ள என்.ஆா்.கே.ஆா்.வீதியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் விக்னேஷ் (13). இவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரியப்பன் மகன் காா்த்தீஸ்வரன் (7) என்பவரும், கடையில் வேலைபாா்க்கும் அய்யனாருக்கு சாப்பாடு கொடுக்க சனிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

பி.கே.எஸ்.ஏ.சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை அவா்கள் முந்த முயன்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில், பின்னால் அமா்ந்திருந்த காா்த்தீஸ்வரன், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விக்னேஷ் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநா் குருசாமியை (38) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com