அருப்புக்கோட்டை: நமச்சிவாயபுரம் விலக்கு அருகே சாலை விபத்துக்களைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை- விருதுநகா் சாலையில் நமச்சிவாயபுரம் விலக்கு பேருந்து நிறுத்தம் அருகே சாலை ‘எஸ்’ வடிவத்தில் வளைவாக உள்ளது. இந்த வளைவை அறியாமல் அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் அங்கு அபாயச்சாலை வளைவு உள்ளதைக் குறிக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கவேண்டுமென சமூகஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.