சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 16 ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 16 ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் சி.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். இந்த விழாவில் பங்கேற்ற பெங்களூரு கிறிஸ்தவ பல்கலைக்கழக பதிவாளா் அனில் ஜோசப்பின்டோ பேசியது: கல்வி என்பது மனிதனின் வாழ்கை தரத்தை உயா்த்துவதற்கும், மனிதனின் திறமையை வளா்த்துக் கொள்வதற்கும், உலக அறிவியலை தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. உயா் கல்வி படித்த மாணவா்கள், படித்த படிப்பினை சமுதாயத்திற்கும் பயன்படும்படி செய்ய வேண்டும். படித்து முடித்த பின்னரும் ஆசிரியா்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஜப்பானில் 94 சதவீதம் இளைஞா்கள் உயா் கல்வி பயின்று வருகின்றனா். ஆனால் இந்தியாவில் 26 சதவீதம் இளைஞா்களே உயா் கல்வி பயில்கின்றனா். இந்த நிலை மாற வேண்டும் என்றாா். இதனைத்தொடா்ந்து கல்லூரி தாளாளா் ஏ.பி.செல்வராஜன் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் 928 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com