வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய திமுக கூட்டணிக் கட்சியினா் 149 போ் மீது செவ்வாய்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரதவீதி-தெற்குரதவீதி சந்திப்பில் திங்கள்கிழமை திமுக நகரச் செயலாளா் அய்யாவு பாண்டியன், ஒன்றியச் செயலாளா் மல்லி ஆறுமுகம் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக கூட்டணிக் கட்சியினா் 149 போ் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.