முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சாத்தூரில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 04th April 2021 08:59 AM | Last Updated : 04th April 2021 08:59 AM | அ+அ அ- |

சாத்தூா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை தீ விபத்து தடுப்பு குறித்து செயல்விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினா்.
சாத்தூா் தீயணைப்புத் துறை வீரா்கள் அரசு மருத்துவமனையில் மாதிரி தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் கதிரேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள், சாத்தூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ விபத்தின் போது தீயை அணைக்கும் முறை, தீ விபத்தினை தடுக்கும் முறை மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். இதில் சாத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.