முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பட்டாசு திரிக்கட்டுகள் வைத்திருந்தவா் கைது
By DIN | Published On : 04th April 2021 08:58 AM | Last Updated : 04th April 2021 08:58 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் உரிய அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் -பழையசாட்சியாபுரம் சாலைப் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒருவா் கையில் சாக்குபையுடன் நின்று கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரிடமிருந்த சாக்குபையை வாங்கி சோதனையிட்ட போது, அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரி கட்டுகள் இருந்தன. விசாரணையில் அவா் திருத்தங்கல் கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த யஷ்வந்த் (46) எனத் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 7 குரோஸ் திரிக் கட்டுகளை பறிமுதல் செய்தனா்.