சிவகாசியில் அமமுக வேட்பாளா் ஜி.சாமிக்காளை வாக்கு சேகரிப்பு

சிவகாசி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.சாமிக்காளை சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.சாமிக்காளை சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசி நகா் பகுதியிலுள்ள பராசக்தி காலனி, முஸ்லிம் தெரு, ஆயில் மில் காலனி, காரனேசன் காலனி, பழனியாண்டவா் காலனி, நேஷனல் காலனி, சோலை காலனி, அம்மன் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு ஜி.சாமிக்காளை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: சிவகாசி நகராட்சிக்கு போதிய வருமானம் இருந்தும் பல இடங்களில் மழை நீா் செல்ல போதிய வாய்க்கால் வசதி இல்லை. கழிவு நீா் வாய்க்கால் வசதி இல்லை. பல இடங்களில் குப்பை அள்ளாமல் துா்நாற்றம் வீசுகிறது. நான் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றால் சிவகாசியில் உள்ள, இது போன்ற பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன். சிங்கார சிவகாசியாக மாற்றுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com