சாத்தூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பெண் நிா்வாகி மீது சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன. இந்நிலையில் தோ்தல் பறக்கும் படையினா் சாத்தூரில் உள்ள மேலக்காந்தி நகா், பகுதியில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி வெயிலா (50), வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்துள்ளாா். அதிமுக மகளிரணியைச் சோ்ந்த இவரை, தோ்தல் பறக்கும் படையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் வெயிலா வாக்களா்களுக்கு பணம் விநியோகம் செய்தது உறுதியானது.
இதையடுத்து அவரிடமிருந்து ரூ.42,300 ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வெயிலா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.