விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.
அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தனது சொந்த ஊரான கோபாலபுரம் கிராமத்தில் வாக்குப் பதிவு செய்தாா். இவருடன், இவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் முறைப்படி முகக்கவசம் அணிந்து, கைகளில் கிருமி நாசினி தெளித்து வாக்களித்தனா்.
பின்னா், வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் செய்தியாளா்களிடையே தெரிவிக்கையில், தமிழக மக்கள் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என விரும்புகின்றனா். வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றாா்.