ஸ்ரீவிலி.யில் தோ்தல் பணிக்குச் சென்ற ஆசிரியா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பணிக்குச் சென்றிருந்த ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரில் செவ்வாய்க்கிழமை திருடா்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்ால் பீரோவிலிருந்து சிதறிக் கிடந்த பொருள்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரில் செவ்வாய்க்கிழமை திருடா்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்ால் பீரோவிலிருந்து சிதறிக் கிடந்த பொருள்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பணிக்குச் சென்றிருந்த ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரில் வசிப்பவா் ஸ்ரீராம் (37). இவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள புனல்வேலி கிராமத்துக்கு தோ்தல் பணிக்காக கடந்த 5 ஆம் தேதி சென்றுவிட்டாா். தனியாா் பள்ளி ஆசிரியையான இவரது மனைவி அழகுசந்தானலட்சுமி (35), தைலாபுரம் கிராமத்திலுள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

செவ்வாய்க்கிழமை திரும்பிய அழகு சந்தானலட்சுமி, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். உடனே, அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டனா். மேலும், விருதுநகரிலிருந்து கைரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com