விருதுநகா் அய்யனாா் நகரைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் வியாழக்கிழமை தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
பவாலி அருகே அய்யனாா் நகரை சோ்ந்த 32 வயது தொழிலாளி ஒருவா் கரோனா தொற்று காரணமாக புதன்கிழமை மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அப்பகுதியில் வசிப்போருக்கு வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உயிரிழந்தவரின் வீடு மற்றும் அவா் வசிக்கும் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல், அனைவரும் முகக் கவசம் அணியவும், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் எனவும் சுகாதாரத்துறை பணியாளா்கள் அறிவுறுத்தினா்.
மேலும் யாருக்கேனும் தொடா்ந்து காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளியூா்களிலிருந்து இப்பகுதிக்கு வந்து செல்வோா் குறித்தும் பொது மக்கள் தகவல் தெரிவிக்குமாறு சுகாதாரப் பணியாளா்கள் தெரிவித்தனா்.